ராமேஸ்வரம் கோயில் -"வசூலில் மட்டும்தான் குறியாக இருக்கிறது" இந்து அறநிலையத்துறை -விளாசிய உயர் நீதிமன்றம்
"வசூலில் மட்டும்தான் குறியாக இருக்கிறது" இந்து அறநிலையத்துறையை விட்டு விளாசிய உயர் நீதிமன்றம்! By Mani Singh S Updated: Thursday, September 26, 2024, 15:45 [IST] l மதுரை: இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. அந்த துறை வசூல் ராஜா எம்பிபிஎஸ் பணிகளை மட்டுமே செய்கிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. https://www.youtube.com/watch?v=UZ42lyKnP0Q&pp=ygVg4K6w4K6-4K6u4K-H4K644K-N4K614K6w4K6u4K-NICDgrpXgr4vgrq_grr_grrLgr40gLSDgrongrq_grrDgr40g4K6o4K-A4K6k4K6_4K6u4K6p4K-N4K6x4K6u4K-N ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மிகவும் பழமையானது. பிரசித்தி பெற்றது. விதிப்படி கோயிலில் 12 குருக்களும் 19 உதவி குருக்களும் பணியில் இருக்க வேண்டும்.