அமைச்சர் உதயநிதி வருகைக்கு அர்ச்சகர்ள் துன்புறுத்தல்
நேற்று மாலை இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அனைவரும் சாலையில் மாலை 3 மணி முதல் 6.45 மணி வரை காத்திருந்தார்கள். ஆறே முக்கால் மணிக்கு உதயநிதி வந்தபிறகு தான் அனைவரும் கிளம்பினார்கள். இதில் இந்துக்கள் அடையாளமாக குருக்கள் பட்டாசாரியர்கள் பூசாரிகள் பலரும் இருந்தார்கள். அனைவரும் சாலையில் உட்காரக் கூட இடம் இன்றி ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள்.
அறநிலையத்துறை உத்தரவு இடுவதற்கு அதிகாரம் அற்றது உத்தரவு இடுவது போல எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறது கோவில் தர்மகர்த்தா பிரதிநியாக உள்ள துறை கோவிலின் மதச் சட்டங்கள் பிரகாரம் அர்ச்சகருக்கு உத்தரவு போட முடியாது. வேண்டுகோள் தான் வைக்க முடியும் ஆனால் இவர்கள் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு சட்டத்தை வளைத்துக் கொண்டு தன்னிஷ்டமாக சட்டங்களை எழுதிக் கொண்டு நாங்கள் அர்ச்சகர்களை கேள்வி கேட்போம் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டு அரசு காவல்துறை ஒன்றுக்கொன்று கைகோர்த்துக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மூலமாக பெரும் அடக்கு முறையை தான் பல வருஷங்களாக செய்து வருகிறது என்பது மிகையாகாது
Comments
Post a Comment